Thursday, February 28, 2008

◌ என்னுடல்

-சுகிர்தராணி

குறுஞ்செடிகள் மண்டிய மலையில்
பெருகுகிறது ஒரு நதி
அதன் கரைகளில் வளைந்து
நீர்ப்பரப்பினைத் தொட்டோடுகின்றன
பால்வழியும் மரத்தின் கிளைகள்
இஞ்சியின் சுவைகூடிய பழங்கள்
மெல்லியதோல் பிரித்து
விதைகளை வெளித்தள்ளுகின்றன
பாறைகளில் பள்ளம்பறித்தெஞ்சிய நீர்
முனைகளில் வழுக்கி விழுகிறது
அருவியாய்
நீர்த்தாரைகளின் அழுத்தத்தில்
குருதிபடர்ந்த வாயை நனைக்கிறது
வேட்டையில் திருப்தியுற்ற புலி
கிழிறங்குகையில்
எரிமலையின் பிளந்த வாயிலிருந்து
தெறிக்கிறது சிவப்புச் சாம்பல்
வானம் நிறமிழக்கவ
லஞ்சுழிப் புயல் நிலத்தை அசைக்கிறது
குளிர்ந்த இரவில் வெம்மை
தன்னைக் கரைத்துக் கொள்கிறது
இறுதியில் இயற்கை
என் உடலாகிக் கிடக்கிறது.

1 comment:

அம்மூர் said...

இறுதியில்
இயற்கையோடு
இன்னொரு காட்சியை
பிரதிபலிக்கச் செய்த விதம் அற்புதம்!